நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் என்றும், அரசியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாட்டு மைய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் தொழில் திறன் மேம்பாடு குறித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும்போது விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் எத்தனை தடவை வெளிநாட்டுக்கு போய் வருவது என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் நடந்து வரும் சில சம்பவங்களால் ஆளும் கட்சியினர் அச்சத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன் என்றும், இன்னும் அதிக அளவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், முடிவு செய்துவிட்டு கூறுகிறேன் என்று பதில் அளித்தார். திமுக வெற்றி பெற்றால் வாக்கு மிஷின் சரியாக வேலை செய்கிறது.
தோல்வியடைந்தால் வாக்கு மிஷின் வேலை செய்யாதா..? அப்படி என்றால் திமுகவினர் வெற்றி பெற்றது உண்மை இல்லையா..? என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, அனைத்து தலைவர்களும் வருகிறார்கள். ஜனநாயகம் பெருகி வருகிறது என்பதைத்தான் பிரதமர் மோடி தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார், என்று தமிழிசை தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.