காரைக்கால் அடுத்த திருநள்ளாறு புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் யானை பிரக்ருதியுடன் சிறுவர்கள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் ஆலயத்தில் பிரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானை ஆசி வழங்குவது வழக்கம்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோவிலுக்கு வாடிக்கையாக வருகை தரும் காரைக்காலைச் சேர்ந்த சிவபாரதி-நாராயணன் சகோதரர்கள் யானையிடம் விளையாடி ஆசிபெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தங்கள் பெற்றோருடன் கோவிலுக்கு வந்த சகோதரர்கள் வழக்கம் போல யானையிடம் ஆசி பெற சென்ற போது, யானை கோவில் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி கொண்டிருப்பதைப் பார்த்து குஷியாகி விட்டனர். குளத்தில் குளித்த யானை பிரக்ருதியும் சிறுவர்களை கண்டவுடன் ஆர்வமாக மேலே வந்து சிறுவர்களை பார்த்து தனது வழக்கமான பிளிறல் சத்தம் எழுப்பியது. தொடர்ந்து சிறுவர்களுக்கு ஆசிகள் வழங்கி தனது துதிக்கையால் டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்தது. கோவில் யானையுடன் சிறுவர்கள் விளையாடும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.