தாமிரபரணி நதியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியானது வற்றாத ஜீவநதியாக உள்ளது. மேலும், இந்த நதியானது தமிழகத்தில் பொதிகை மலையில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கும். தமிழகத்தில் தொடங்கி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு சிறப்பு நதியாக உள்ளது.
தாமிரபரணி நதியானது கடந்த சில வருடங்களாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் ஆய்வுகளை செய்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாமிரபரணி வடகால் வாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், வாய்க்காலில் உள்ள மீன்கள் அனைத்தும் குவியல் குவியலாக செத்து மிதக்கிறது. மேலும், செத்து மிதக்கும் இந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மிகவும் பாரம்பரியமிக்க மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் போற்றக்கூடிய இந்த வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.