தாமிரபரணி நதியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியானது வற்றாத ஜீவநதியாக உள்ளது. மேலும், இந்த நதியானது தமிழகத்தில் பொதிகை மலையில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கும். தமிழகத்தில் தொடங்கி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு சிறப்பு நதியாக உள்ளது.
தாமிரபரணி நதியானது கடந்த சில வருடங்களாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் ஆய்வுகளை செய்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாமிரபரணி வடகால் வாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், வாய்க்காலில் உள்ள மீன்கள் அனைத்தும் குவியல் குவியலாக செத்து மிதக்கிறது. மேலும், செத்து மிதக்கும் இந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மிகவும் பாரம்பரியமிக்க மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் போற்றக்கூடிய இந்த வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.