தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மியூசிக்கல் சேர், லெமன் இன் தி ஸ்பூன், உறியடிப்போட்டி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள், பெண்கள் என சரிசமம் என்று நிரூபிக்கும் வகையில், ஒருபுறம் மேயர் சன்.ராமநாதன் மற்றும் ஆண் மாமன்ற உறுப்பினர்களும், மற்றொருபுறம் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் பெண் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இருதரப்பினரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர். அப்போது, எதிர்பார்க்காத விதமாக, சட்டென்று கயிறு அறுந்தது. இதில் மேயர், துணை மேயர், ஆணையர் உட்பட அனைவரும் கீழே விழுந்தனர்.
இது அங்கு கூடி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆண்களுக்கு பெண்கள் நிகர் என இந்த போட்டியின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.