திருவள்ளூர் : பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் விஜயன் 30 இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும் குகன்(7) என்ற மகன் சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.
இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவரும் நிலையில் நேற்று விஜயன் வழக்கம் போல் பூண்டி ஏரியில் படகில் மீன் பிடிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சுமார் 12 மணி அளவில் பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் சென்று தேடி பார்த்தபோது படகு மட்டும் தணியாக இருப்பதையும் விஜயன் மாயமாகிஉள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயன் உடலை தேடிவந்த நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விஜயன் உடலை சடலமாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.