திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மயானத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள மயானத்தில் இறந்த ஒருவரின் அஸ்தி உறவினர்கள் எடுக்கச் சென்றபோது, பிணம் எரித்த இடத்தின் அருகே அரை நிர்வாணமாக வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்த வாலிபர் திண்டுக்கல் மேற்கு மரியாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக் ராஜா என தெரியவந்தது.
இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து நடந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நேற்று வேடப்பட்டி அருகே உள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாலிபரை கொலை செய்து பிணம் எரிந்த இடத்தின் அருகே போட்டு விட்டுச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.