Categories: தமிழகம்

பெற்றோர்களே கவனமா இருங்க…விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்..!!

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் வெள்ளீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் சரத் குமார்(26). இவருக்கும் வனஜா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி ஹரி விக்னேஷ் என்ற 3 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள சரத்தின் பெரியம்மா உமாபதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை ஹரி விக்னேஷ் தவறி விழுந்து விட்டார்.

நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனது பெரியம்மா உமாபதி வீட்டு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தனது மகன் தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் தாசம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.