திருப்பூர் : திருப்பூர் அருகே சொத்து பிரச்சனையில் சொந்த அக்காவின் கணவரை, தம்பியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தென்னங்கரைபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(42).விவசாயி ஆன இவருக்கு சங்கீதா (32), என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். செந்தில்குமார் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும், சங்கீதாவின் தம்பி தீபன் குமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் சங்கீதா வீட்டில் நாளை நடைபெற இருந்த விஷேசத்திற்கு உறவினர்களை அழைக்க செந்தில்குமார் அவரது மனைவி சங்கீதா இருவரும் சென்று விட்டு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தீபன் குமார் அவரது அக்கா சங்கீதா மற்றும் அவரது கணவரிடம் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தீபன்குமார் அவரது அக்காவின் கணவரை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமாரின் தலையில் அருகே கிடந்த கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சங்கீதா ஊதியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீபன் குமாரை தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.