மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த போது, அஜித் குமார் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் நடக்கக் கூடாது, காவல்துறை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.
பெருந்தன்மையோடு சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் சம்மதித்துள்ளார்.இது அவருடைய நேர்மையை காட்டுகிறது. முதலமைச்சர் தமிழ்நாட்டுடைய வளர்ச்சியிலும், தமிழ்நாட்டு மக்களுடைய முன்னேற்றத்தில் இரவு பகலும் அயராது உழைத்து வருவதாக தெரிவித்த செல்வப் பெருந்தகை, இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க
புகார் கொடுத்தவரின் பின்புலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படியுங்க: அதிமுக உடனான கூட்டணி கதவை சாத்திய விஜய்? செயற்குழுவில் வெளியான அதிரடி அறிவிப்பு!
அஜித் குமாரின் மீது புகார் கொடுத்த பெண்ணின் மீது ஏராளமான புகார்கள் வருவதாக தெரிவித்த செல்வப் பெருந்தகை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ஒரு சில காவலர்கள் செய்யும் செயல்கள் அரசுக்கு சங்கடங்களை உண்டாக்குகிறது.
அவதூறு பரப்ப சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என வேதனை தெரிவித்தார். காவல்துறையின் இந்த குற்ற செயலுக்காக தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
அஜித் குமார் கொலை சம்பவத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையால் அஜித் குமார் கொல்லப்பட்டதால் அஜித் குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கூட நிவாரண தொகை கொடுக்கலாம் என்றவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜித் குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்குகின்றன. தற்போது திமுக கூட்டணியில் எவ்வித…
This website uses cookies.