தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த ஆண் சடலம்… விசாரணையில் திக்…திக்.. : கிலியில் கிருஷ்ணகிரி!!
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உடலில் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சுண்டகிரி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் காயங்களுடன் இறந்த கிடந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்த நிலையில் உள்ள உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.