தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த ஆண் சடலம்… விசாரணையில் திக்…திக்.. : கிலியில் கிருஷ்ணகிரி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 5:05 pm
Krishnagiri
Quick Share

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த ஆண் சடலம்… விசாரணையில் திக்…திக்.. : கிலியில் கிருஷ்ணகிரி!!

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உடலில் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சுண்டகிரி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் காயங்களுடன் இறந்த கிடந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்த நிலையில் உள்ள உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 338

0

0