ஓடும் ரயிலில் பணியில் இருந்த இளம்பெண் ஊழியருக்கு கத்திக்குத்து : கைப் பையை பறித்து ஓடிய மர்ம நபர்கள்.!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 6:56 pm
Train
Quick Share

ஓடும் ரயிலில் பணியில் இருந்த இளம்பெண் ஊழியருக்கு கத்திக்குத்து : கைப் பையை பறித்து ஓடிய மர்ம நபர்கள்.!!

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி (28)கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்,ரயில்வே காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் திண்டுக்கலிருந்து திருநெல்வேலி செல்லும் காலி ரயில் பெட்டிகளின் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார.

ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்து கொண்டிருந்த போது திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர் ரயில்வே பெண் கார்டு கையிலிருந்த கை பையை பறிக்க முயன்று உள்ளார்கள்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீதான வழக்கில் அதிரடி திருப்பம் : உச்சநீதிமன்றம் உத்தரவு.. BJP செம Happy..!

அவர் தர மறுத்ததையடுத்து கத்தியால் தலையில் லேசான காயத்தை ஏற்படுத்தி பையை பறித்து சென்றனர். பையில் செல்போன் மற்றும் 500 ருபாய் பணம் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Views: - 135

0

0