மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய ஓட்டுநர் : விழுப்புரத்தில் பரபரப்பு!!
விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் அரசு பேருந்து காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்கள் நலன் கருதி சென்ற ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவர்களுக்கு மட்டும் இயங்கும் பேருந்து என்று பள்ளி சென்று வரும் நேரங்களில் இந்த பேருந்தை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இவ்வளவு நாட்கள் மாணவர்கள் மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி பேருந்து இயக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாறியதால் இந்த பேருந்தை கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் பொதுமக்கள் சென்றுவரும் அரசு பேருந்தாகவே மாற்றப்பட்டது.
இந்நிலையில் கோலியனூர் கூட் ரோட்டில் இருந்து நேற்று காலை வந்த இந்த அரசு பேருந்து ராகவன்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தவர்களை ஏற்றாமல் வந்ததாக கூறி இன்று வந்த அரசு பேருந்தில் ஏறி மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் கம்பன் நகர் பகுதியில் சாலையிலேயே பேருந்தை இயக்காமல் நிறுத்தி பேருந்தில் இருந்து இறங்கி வந்து ஓரமாக அமர்ந்து விட்டார்.
பின்னர் அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி சென்று விட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் நேற்று நான் பேருந்த இயக்கவில்லை என்று கூறிய பின்னர் தான் மாணவர்கள் அமைதி அடைந்தனர். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து மாணவர்களுடன் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.