திருப்பூர் : பல்லடத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் சட்டவிதிகளை மீறி இயங்கும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக விவசாயி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்திற்க 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி விஜயகுமார் என்பவர் தனி ஒருவராக ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விவசாயிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றதில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனால் விவசாயிகள் கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து கல்குவாரியை நோக்கி புறப்பட்டபோது, போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கல்குவாரிக்கு நுழைய முற்பட்டபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்குவாரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட விவசாயிகள் 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த கல்குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.