Categories: தமிழகம்

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக பச்சை பெருமாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் சுடுகாட்டில் குழி தோண்டி தொடர்ந்து அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவேல் மகன் மாரியப்பன் (45) என்பவர் பச்சை பெருமாள் புரம் சுடுகாடு அருகே விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுடுகாட்டில் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடையது எனக் கூறி அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டார்.

மேலும் கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து அடக்கம் செய்வதற்காக வந்த உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெளியே வருமாறு கூறியும் சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் வெளியே வரவில்லை.
இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் படுத்து இருந்த மாரியப்பன் இடம் பேசி வெளியே வரவழைத்தனர்.
தொடர்ந்து விஏஓ மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்து பார்த்தபோது அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் மாரியப்பனை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தன்னுடைய நிலம் என குழிக்குள் இறங்கி படுத்த நபரால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.