Categories: தமிழகம்

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய தலைமை ஆசிரியர்… செல்போனில் பேச விடாததால் ஆத்திரம்…

திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. அதே ஊரைச் சேர்ந்த குமார்-பிரீத்தா தம்பதியினரின் மகன் சசிகுமார் (13). அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில் நேற்று உடற்கல்வி வகுப்பில் விளையாடுவதற்காக அனுமதி பெற, பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணனிடம், சசிகுமார் உடன் மூன்று மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த தலைமையாசிரியர் மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

மாணவர்களை அழைத்து போன் கூட பேச விட மாட்டீர்களா என கூறி அடித்துள்ளார். இதில் மற்ற மாணவர்கள் சிக்காமல் ஓடிவிட்டனர். சசிகுமார் மட்டும் சிக்கியதால் பிரம்பால் கைகள் முதுகு, வயிறு ஆகியவற்றால் அடித்துள்ளார். இதனால் இரு கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றிலும் முதுகிலும் அடித்ததால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்த நிலையில், பலத்த காயமடைந்த மாணவனை அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். இது சம்மந்தமாக மாணவன் சசிகுமாரின் பெற்றோர் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

KavinKumar

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

6 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

7 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

7 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

8 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

9 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

10 hours ago

This website uses cookies.