கன்னியாகுமரி : கடியப்பட்டணத்தில் 1 1/2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன் தன் தங்கையை மடியில் வைத்து புன் சிரிப்போடு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை குளமாக்கி வருகிறது
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி கடந்த 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் அந்த சிறுவனை ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்த நிலையில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது அந்த நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷி தனது தங்கையான கைக்குழந்தையை மடியில் வைத்து பிஞ்சு புன் சிரிப்புடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.