Categories: தமிழகம்

விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!!

விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!!

கோவை கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருக்கு ரூ.2,30,000க்கு விற்பனை செய்துள்ளார்.

பணத்தை பின்னர் தருகிறேன் என்று கூறி காரை எடுத்துச் சென்றவர் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து சண்முகசுந்தரம் கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர்
பிரகாசத்தை அழைத்து விசாரித்த போது இன்னும் ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரகாசம் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த சண்முகசுந்தரம் பிரகாசத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசம் குறித்து விசாரித்து அவரது செல்போன் எண் மூலமாக அவர் குடியிருக்கும் முகவரியை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் புகழேந்தி பீளமேடு சிவராம் நகர் ஆடிஸ் வீதியில் குடியிருக்கும் பிரகாசம் வீட்டிற்கு சென்று பிரகாசத்தை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது பிரகாசம் வர மறுத்து தலைமை காவலர் புகழேந்தியின் இடது கையை கடித்து விட்டு, தனக்குத்தானே சுவற்றில் முட்டி நெற்றியில் சிறிய அளவில் ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். காவலர் புகழேந்தி தன்னைத் தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.

மேலும் காவலர் புகழேந்தியை பிரகாசம் கடித்ததில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலர் புகழேந்தி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரகாசம் வார பத்திரிகைகளில் செய்தியாளராக நிருபராக பணியாற்றி வருவதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசம் கடித்ததால் கையில் காயம் அடைந்த தலைமை காவலர் புகழேந்தி அளித்த புகாரின் அடிப்படையில சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசத்தின் மீது காவலரை
பணியைச் செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகள் பேசியது, கடித்து தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் பிரகாசம் ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

14 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

15 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

15 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

16 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

17 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

17 hours ago

This website uses cookies.