Categories: தமிழகம்

மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த நபர் பலி : அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பறிபோன சோகம்!!

திருப்பூர் : திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபர் உயிரிழந்த நிலையில் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடவேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வி.கே.ஆர் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் அப்பகுதியில் பாதாள சாக்கடைக் குழிகள் திறக்கப்பட்டு மூடாமல் விடப்பட்டுள்ளது.

இதனை மூடி விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் மாநகராட்சி செவிசாய்க்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் அங்கு பாதாள சாக்கடைக் குழி திறந்து இருப்பது தெரியாமல் பாதாள சாக்கடைக்குள் விழுந்துள்ளார்.

அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் ஒருவர் தலைகீழாக விழுந்து கிடப்பதை கண்டு உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபரை மீட்ட போது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்பகுதியில் திறந்து இருக்கின்ற பாதாள சாக்கடையை மூட பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக தற்போது உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதற்கு பொறுப்பேற்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.