Categories: தமிழகம்

ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர் : குவியும் பாராட்டு…

புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த பணத்தை போலீசார் உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் காமராஜர் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி சாந்தி (45). இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது செலவிற்காக, தனியார் மருத்துவமனை வாசலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர், ரூபாய் 10 ஆயிரம் எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போன்னிற்கு பணம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கியில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிதம்பரத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் பணம் வெளியில் இருப்பதை கண்டு அதனை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் சாந்தி உடையது என வங்கி ஊழியர்கள் உறுதி செய்ததை அடுத்து வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், அந்த பணத்தை சாந்தியிடம் ஒப்படைத்தார்.
மேலும் பணத்தை ஏடிஎம் மையத்திலிருந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரகுமாரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.