தூத்துக்குடி ; எட்டையாபுரம் அருகே கோவில் திருவிழாவில் முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ளது புங்கவர் நத்தம் கிராமம். இங்குள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, ஜெயபால் என்பவர் சுடலை மாடசுவாமிக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கருவேலி முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறுவர். இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதே போல், இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான முள் படுக்கை அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் உச்சி மாகாளியம்மனுக்கு சுடலை மாடசுவாமி விரதம் மேற்கொண்ட ஜெயபால் சாமியார் சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பெண் பக்தர்கள் கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்டனர்.
சுவாமிகள் பூஜை செய்து, சாமியாரை முள் படுக்கைக்கு அழைத்து வந்தனர். அவர் முள் படுக்கையில் ஏறி நின்றபடி அருள் வந்து ஆடியபடியே சில பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். இதனைக் காண சென்னை, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையாபுரம் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.