திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பழங்குடியின மக்கள் இரண்டு குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில்
கட்டித் தரப்பட்ட வீடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும அவர்களின் குடும்பத்திற்கு தேவையான சமையல் எரிவாயு, அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், காய்கறி அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்கனவே 10 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாகவும் தற்போது இரண்டு வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும் தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் பேசினார்.
உடனே செய்தியாளர் ஒருவர், ரசிகர் மன்ற பணத்தில் தான் வீடு கட்டியதாக சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது கூடி இருந்த ரசிகர்கள் குரல் எழுப்பியவாறு அவரை முந்தி அடித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர். ரசிகர் மன்றத்தினர் அவர்கள் வழங்கிய பணத்தில் வீடு கட்டியதாக ரசிகர்கள் தெரிவித்த நிலையில் தளபதி விஜய் இலவச வீடு என புஸ்ஷி ஆனந்த் தெரிவித்ததால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.