சென்னை : திருமணம் நின்ற விரக்தியில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட பெண் தலைமை காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரேவேந்திரன். தனியார் வங்கி ஊழியரான இவரும் புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கமாள் தெரு பகுதியில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி 5 சவரன் நகை, இரு சக்கரவாகனம் ஒருலட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் திருமண முடிவு ரத்து செய்யப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த செல்வி அவ்வபோது ரேவேந்திரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் காதலன் வீட்டிற்கு சென்று காதலன் இல்லாத சமயத்தில் ரேவேந்திரனின் பெற்றோரிடம் சண்டையிட்டு தகாத ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்க முற்பட்டுள்ளார்
இதனால் ரேவேந்திரனின் தாயார் ரேனுகா காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் சென்ற நிலையில் தடுக்க முற்பட்டுள்ளார்.
இதில் செல்வி அடங்க மறுக்கவே அதை செல்போனில் படம் பிடித்த தலைமை காவலரை வலது கையை பிடித்து கடித்துள்ளார். மேலும் தலைமை காவலர் சரவணனின் சட்டையை பிடித்து கிழித்துள்ளார்
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றாயூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.
பின்னர் , கொலை மிரட்டல் விடுத்தல் , அத்துமீறி உள்ளே நுழைதல் , தகாத வார்த்தைகளில் பேசுதல் , அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் , போன்ற ஆறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
திருமணம் நின்ற விரக்தியில் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சண்டையிட்டதும், தடுக்க சென்ற காவலரின் கையை பிடித்து கடித்து விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.