அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டமானது மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசியவர், 234 தொகுதிகளிலும் பணியாற்ற கழக நிர்வாகிகளின் கட்டமைப்பை சரி செய்து வரும் தேர்தலில் மதுரையில் அமமுகவினர் போட்டியிட்டாலும், கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் தீய சக்தி திமுகவை வீழ்த்த திறம்பட செயல்பட கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என பிரதமர் கூறியது சரியான முடிவு., சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான படிப்பிலும் சரி., வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து., மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று தான் முடிவு எடுத்துள்ளனர். யுகங்கள் அடிப்படையில் செய்தி வருவதாக முதல்வர் கூறிவதுடன், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் ஆட்சி திமுக., மத்திய அரசுக்கு எதிராக மாறு தட்டுவது பார்க்கும் போது வடிவேல் காமெடி பார்ப்பது போல இருக்கிறது என்றார்.
மதுரைக்கு வந்த முதல்வரால் என்ன நடந்துச்சு.? அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம்.! சாக்கடையை துணியை வைத்து மூடியது தான்.! முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததை செய்திகளில் பார்த்தேன்.
இதையும் படியுங்க: ஒற்றை சீட்டுக்காக கூட்டணி.. மன்னித்துவிடுகிறோம் : வேல்முருகனை சீண்டும் தவெக போஸ்டர்.!!
திமுக கூட்டணி காட்சிகளை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செய்கிறது என திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. 2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழகத்தில் வெற்றி பெறுவோம். கலைஞர் காலத்திலே 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்து நிலையில் பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ளார்.
சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்து கொண்டார்கள். 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். மேலும்., பிஜேபி கூட்டணியையும், எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு.
திருச்சியில் முக்கியமான நிர்வாகிகளின் இல்ல திருமண விழா 4 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்து விட்டனர் என்னுடன் 2017 காலத்தில் இருந்து பயணிக்கிறார்கள் எனவே அமித்ஷா சந்திப்பு குறித்து நான் அனுமதி கேட்கவில்லை என்றார்.
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் தினமும் உங்களுடைய கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
உங்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் போன்று அவருக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்விக்கு.?
அவருக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காக தான்., நாளை மதுரைபுரம் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருக்கலாம். ஆனால்., மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நான் அனுமதி கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும்., உரிமை மீட்பு குழுவும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்.
அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது., அதிமுக என்பது அம்மாவின் கட்சி., அம்மாவின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும் என்பது மட்டுமல்லாமல் யாரெல்லாம் திமுக ஆட்சி வேண்டாம்.! முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார்களோ.? தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.
திமுகவில் கூட்டணி உறுதியாக தான் உள்ளது மக்கள் புறந்தள்ளுகின்றனர். ஆர் கே நகரில் இதே கூட்டணி தானே இருந்தது., 26 இல் திமுக கூட்டணி சாயம் வெளுத்து விடும் உறுதியாக அந்தக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை.
எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும் இன்னும் காண கட்சியாக பலம் பெறும் திமுக கூட்டணி கட்சி மீது மக்களிடம் அதித்தி உள்ளது கூட்டணியை எதிர்த்தாலும் வரக்கூடிய தேர்தலில் தோல்வியை சந்திக்க இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் அடிக்கடி வர இருக்கிறார் என அக்காட்சியை சேர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள் தற்சமயம் மதுரை வருகிறார் என்றார்.
வேல்முருகனை மன்னித்துவிடுகிறோம் என மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 10…
நடிகை சமந்தா, உடன் நடித்த நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து…
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…
கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…
ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…
This website uses cookies.