திருப்பூர் : கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவியை தீயணைப்பு துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராயம்பாளையம் கிராமத்தில் புலிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். சொந்தமாக வேன் ஓட்டிவரும் இவரது மூத்தமகள் பவதாரிணி (வயது 16) என்பவர் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை தங்களது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணறு ஓரமாக கோழி பிடிக்கச் சென்ற போது கிணற்றை சுற்றி படர்ந்திருத்த கொடியில் கால் சிக்கி தடுமாறி தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சிறுமியின் தாத்தா மாரய்யன் மற்றும் அருகில் கட்டிட வேலைக்கு வந்திருந்த மேஸ்திரி சிவக்குமார் ஆகிய இருவரும் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற கிணற்றுக்குள் இருக்கும் படிக்கல்லில் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழு சுமார் அரை மணி நேரம் போராடி மூவரையும் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.