Categories: தமிழகம்

மண் சரிந்து கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் : 21 வயதே ஆன இளம் விவசாயி பலியான சோகம்!!

திருச்சி அருகே வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த கிணற்றில் விழுந்து இளம் விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம்| சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் ஊராட்சியினைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் சதீஷ் வயது (21). டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.

ஊருக்கு அருகே தனது வயலில் நெல் நடவு பணிக்காக சதீஷ் டிராக்டர் இயந்திரம் மூலம் வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் உள்ள கிணறு அருகே டிராக்டர் சென்றபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டு 70 அடி ஆழமுள்ள கிணற்றில் டிராக்டர் சரிந்து உள்ளே விழுந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்று தண்ணீரில் மூழ்கிக் கிடந்த டிராக்டரை முன்னதாக மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து 40 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் தீயணைப்பு துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கிணற்றுக்கு அருகே திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் கிணற்றுத் தண்ணீரில் இருந்து சதீஷை சடலமாக மீட்டனர்.

அவரது உடலை சிறுகனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர் மண் சரிவு ஏற்பட்டு திடீரென அருகில் இருந்த கிணற்றில் விழுந்த சம்பவத்தில் வாலிபர் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

8 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

9 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

10 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

10 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

11 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.