கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மனோஜ் (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்தார்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பரது மகள் ஆர்த்தி (வயது 19) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே சென்ற போது முன்னாள் சென்ற 56-எண் அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்தது.
இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.