பழனியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவை சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கினர்.
பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி தங்கிய நிலையில்,நேற்று நள்ளிரவு தனியார் விடுதிக்கு கேரளாவை சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன்-மனைவியான சுகுமாறன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள் என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்சப் மூலம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையுடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.
மேலும் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் கேரள தம்பதி இருவரும் பழனியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.