Categories: தமிழகம்

கடைசியாக பழனி முருகனை தரிசனம் செய்து கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு : தனியார் விடுதியில் குவிந்த உறவினர்கள்.. உருக வைத்த சோக சம்பவம்!!

பழனியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவை சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா‌ எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கினர்.

பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி தங்கிய நிலையில்,நேற்று நள்ளிரவு தனியார் விடுதிக்கு கேரளாவை சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன்-மனைவியான சுகுமாறன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள்‌ என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்சப் மூலம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த‌ விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையுடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.

மேலும் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன்‌ பிரச்சினையால் கேரள தம்பதி இருவரும் பழனியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.