Categories: தமிழகம்

உயிரிழந்தும் வாழும் மனிதம் : 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு எட்டு பேரில் மறுவாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 33) . கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி விழுப்புரத்தில் இருந்து தனது இருச்சக்கர வாகனத்தில் கக்கனூர் நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் போது அவரது இருச்சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கிவீசப்பட்ட சந்தோஷ் சுயநினைவில்லாத நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவரகள் தெரிவித்தனர்.

அதனையெடுத்து சந்தோஷ் யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவியும் பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்ததன் பேரில் இன்று அதிகாலை முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல் இரண்டு கருவிழிகள் ஆகியவைகள் அகற்றப்பட்டது.

அந்த உறுப்புக்கள் சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 8 பேருக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவ குழுவினரால் அவரின் உடல் உறுப்பான இதயம், கல்லீரல், சிறுநீரகம், இரண்டு கருவிழிகள், இரண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்த குடும்பத்தினர்க்கு உடல் உறுப்புக்கான சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார் அப்பொழுது எஸ்.பி ஸ்ரீநாதா, டீன் குந்தவிதேவி, மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இறந்த பின்பும் தனது உடல் உறுப்புகள் மூலம் 8 பேரின் உயிரில் கலந்து மனித வாழ்வு மகத்தான வாழ்வு என்பதை நிரூபித்துள்ளது இளைஞரின் மரணம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.