விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சேற்றில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னமணி என்பவர் உடல் நிலை குறைவால், நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலை நல்அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் அக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சுடுக்காட்டுக்கு செல்லும் பாதை, தார் சாலை அமைக்கப்படாததால், தற்போது பெய்து வரும் கனமழையால், சாலை, முழுவதும் சேரும் சகதிமாக உள்ள நிலையில், இறந்து போன சின்னமனியின் உடலை, கடும் சிரமத்துடனும், தள்ளாடிக் கொண்டு தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்து போனவரை நிம்மதியாக கூட கொண்டு செல்ல முடியவில்லை என்றும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சீரமைத்து செய்து தரக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம், பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுடுகாட்டு செல்லும் பாதையை சீரமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.