சேலம் : தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 5ஆம் தேதி கடலூர் கெடிலம் ஆற்றில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் என 8 பேர் குளிக்க சென்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் அவர்கள் தத்தளித்தபடி அலறி கூச்சலிட்டனர்.
இதை கேட்டு துடித்துப்போன மக்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் மணல் கொள்ளை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இதே போல நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற இளைஞருடன் 3 சிறுவர்கள் சென்றனர். அப்போது மூன்று சிறுவர்களும் ஆழமான பகதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர்.
இதையடுத்து இளைஞர் பன்னீர்செல்வம் அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். அதில் அந்த இளைஞர் உட்பட 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். 7 வயது சிறுவன் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் நடந்து மக்கள் இன்னும் ஆசுவாசப்படுத்தாத நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குளியை சேர்ந்த முருகேசனின் மகள் காமாச்சி மற்றும் அவரது தம்பி மக்ள் பவித்ரா ஆகியோர் சேத்துக்குளியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பள்ளி விடுமுறை காரணமாக வந்திருந்தனர்.
அப்போது பாட்டி பாப்பாத்தி துணி துவைக்க காவிரி ஆறுக்கு சென்றார். அவருடன் சிறுமிகளும் சென்றனர். அப்போது சிறுமிகள் ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி சிறுமிகள் இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளின் சடலங்களை மீட்ட நிலையில் இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.