திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேடை அமைத்து தேவரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு இருந்தது.
இந்த ஏற்பாடுகளை வேடசந்தூர் முக்குலத்தோர் இளைஞர்கள் பேரவை செய்தனர். இதற்கு முன்பாக கருப்பதேவனூர், கோட்டூர், வேடசந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து வேடசந்தூர் சையது அப்துல் ரஹீம் அரபு அவுலியா தர்காவிற்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் முளைப்பாரிகளை தர்காக்குள் வைத்து இஸ்லாமியர்கள் துவா கொடுத்த பிறகு அவர்களிடமிருந்து முளைப்பாரிகளை வாங்கிக் கொண்டு சந்தை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணி கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் உடன் முளைப்பாரிகளை ஊர்வலமாக ஆத்துமேட்டில் உள்ள மேடைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹன்சிகா என்ற சிறுமி சிலம்பாட்டம் ஆடி அசத்தினார். மேலும் ஊர்வலத்தில் மக்கள் வேலு நாச்சியார் மற்றும் முத்துராமலிங்க தேவர் போல் வேடம் அணிந்து வந்தனர். அதில் தேவர் வேடம் அணிந்து வந்த நபருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் திரு உருவப் படத்திற்கு 100 கிலோ எடையுள்ள மாலை அணிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 50 பேர் கவலைக்கிடம் : உஷார் மக்களே.!!
இதில் திமுக அதிமுக உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேவரின் ஜெயந்தி விழாவிற்கு கொண்டு வந்த முளைப்பாரிகளை தர்காவில் வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.