திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும் மொட்டையடித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
முன்னதாக, முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், பாலசுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தவாறு முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.