திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் அவரது தாயார் நீலம்மாலுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவரது அக்காவான தனலட்சுமிக்கும், இவருக்கும் அவ்வப்போது சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவரது வீட்டின் அருகே சுமார் 4 சென்ட் இடத்திற்காக அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது. பூபாலன் தனது அக்கா கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார்.
இதன் காரணமாக, முன் விரோதம் இருந்து வந்த நிலையில் தலையில் காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூபாலன் அக்கா தனலட்சுமி குடும்பத்தினர் பூபாலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல், வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியதும், இதனால் பூபாலன் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து பூபாலனை அடித்து கொன்ற அக்கா தனலட்சுமி, அவரது கணவர் ரவி, மகன் வல்லரசு, மகள்கள் வெண்மதி, மஞ்சு உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக சொந்த தம்பியை, அக்கா, தனது கணவர், மகன், மகள்கள் ஆகியோருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.