திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியை நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் சாமியாரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
கொமக்கமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகள் கல்லூரி மாணவி ஷேம மாலினியை வௌாத்துகோட்டையில் உள்ள கோவில் ஓன்றில் நாகதோசம் கழிக்க அழைத்து சென்றுள்ளார்.
உறவினர்களுடன் இரவு அங்கேயே தங்கியிருந்த போது பூச்சிமருந்து குடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவில் சாமியார் முனுசாமி திட்டமிட்டு, அப்பெண்ணை அடைய நாகதோஷம் இருப்பதாக கூறி, தன்வசப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து , அவரை தற்கொலை செய்ய தூண்டியது தெரியவந்தது.
பின்னர், சாமியார் முனுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர் .
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.