திருவள்ளூர் ; பொன்னேரி அருகே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி அருகேயுள்ள கொக்கு மேடு பாரத் மெட்ரிக் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் பற்றி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளியில் மாணவர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல் துறையினர் மாணவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியராஜ் குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றும், ஆசிரியர் விவகாரத்தில் மாணவர்கள் அவரை விடுவிக்க போராட வேண்டாம் என பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ் அறிவுறுத்தினார். இதனை ஏற்று மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.