மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் இருவரும் நேற்று நள்ளிரவு அவர்களுக்கு சொந்தமான வயலில் மழையால் தேங்கி நிற்கும் நீரை வடிய வைப்பதற்காக சென்றனர்.
மகன் அருள் முருகன் வயலில் தண்ணீரை வடியவைத்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. அப்போது, அவரது தந்தை அன்பரசு அருகில் நின்றதால், அவர் மீதும் மின்னல் தாக்கி, தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை வயலுக்கு வேலை சென்றவர்கள் வயலில் இருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், மின்னல் தாக்கி தந்தையுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் தளிக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.