கோவை : திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளதாகவும் வைகோவின் மகனும் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை வி.கே. மேனன் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு 80சதவீதம் உள்ளது. மதிமுக 90 சதவீதம் வெற்றி பெரும். இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போதுமானதாக இல்லை. திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.
மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது என்பதற்காகவே திமுக உடன் இணைந்து உள்ளோம். நாங்கள் கடந்த எட்டு மாதத்தில் முதல்வர் செய்த சாதனைகளையும் கடந்த ஆட்சியில் செய்யத் தவறிய செயல்களையும் கூறி வாக்கு சேகரிக்க உள்ளோம்.
கடந்த ஆட்சியில் 5 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி தமிழகத்திற்கு வரவில்லை.
தொண்டர்களின் நிர்ப்பந்தத்தினால் தான் கட்சியில் உள்ளேன். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு செய்தது சாத்தியப்படாது. உடை அணிவது அவரவர் உரிமை ஹிஜாப் அணிவது பல ஆண்டு காலங்களாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் ஒன்று.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூயஸ் குடிநீர் திட்டத்தை எதிர்க்கிறேன். அதேசமயம் பல பணிகள் இதில் நிறைவேற்றப்பட்டதால் இதனை தற்பொழுது நிறுத்துவது என்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நீட் தேர்வினால் பல அரசுப் பள்ளி மாணவர்கள் மலைவாழ் மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குச் சென்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அது தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு காரணமாக தான் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிக்குச் சென்றார்களே தவிர நீட் தேர்வினால் அல்ல.
அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குப் போகக்கூடாது என்ற கொள்கையைத்தான் பாஜக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.