தூத்துக்குடி ; தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 02.11.2023 அன்று தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23) மற்றும் அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை சண்முகம் மகன் முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான வாசுதேவன் மகன் பரத் விக்னேஷ்குமார் (25), தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த அங்குதாஸ் மகன் கருப்பசாமி (24), தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைதான 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 169 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.