கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 விசைப்படகுகளை தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக விசைப்படகு மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவை வலை தொழில் ஈடுபட்டு வருவதினாலும், மீன்பிடி தடைக்காலத்திலும் மீன் பிடிப்பதாலும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று (19.03.2024) இரவு 10.00 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் மீனவர்கள் சென்று, துறைமுகத்திலிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 1 விசைப்படகையும் (13 மீனவர்கள்) , மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகள் (73 மீனவர்கள்) மொத்தம் 6 விசைப்படகுகள் 86 மீனவர்களை சிறைபிடித்து இன்று அதிகாலை சுமார் 05 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக இறகு தளத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
இதில் கடலில் சிறை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெனெட்டிக் ( 54) காயம் ஏற்பட்டு மீன்பிடித் துறைமுக மருத்துவமனையில் முதலுதவி செய்து நல்ல நிலையில் இருந்து வருகிறார்கள்.
மேற்படி சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்து விட்டு, அதில் உள்ள 86 மீனவர்களையும் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தில் வைத்துள்ளார்கள்.இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.