கோவில்பட்டி அருகே திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் முதிய பெண்ணை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிச்சைத் தலைவன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்திராணி (52). இவர் சொந்த வீடு இல்லாததால் புறம்போக்கு நிலத்தில் ஐந்து வருடமாக தகர செட் அமைத்து, தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும், தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு இவர்கள் குடியிருந்து வரும் புறம்போக்கு நிலத்தை பட்டாவாக வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அய்யனார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி மகள் திருமணமாகாத சரஸ்வதி (55) என்பவருக்கு அதே இடத்திற்கு இலவச மனைப் பட்டா வாங்கி தருவதாக உத்தரவாதம் தந்துள்ளதையடுத்து, இந்திராணியை அந்த இடத்தை காலி செய்து தரக் கூறி தொடர்ந்து தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.
இன்று இந்திராணியின் வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் இடத்தை காலி செய்து தரக் கோரி மிரட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் இந்திராணியை தகாத வார்த்தையால் திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதில் மயக்கம் அடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து, அவரது மகன் விரைந்து வந்து கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி பெண்ணை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.