கோவில்பட்டி அருகே திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் முதிய பெண்ணை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிச்சைத் தலைவன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்திராணி (52). இவர் சொந்த வீடு இல்லாததால் புறம்போக்கு நிலத்தில் ஐந்து வருடமாக தகர செட் அமைத்து, தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும், தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு இவர்கள் குடியிருந்து வரும் புறம்போக்கு நிலத்தை பட்டாவாக வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அய்யனார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி மகள் திருமணமாகாத சரஸ்வதி (55) என்பவருக்கு அதே இடத்திற்கு இலவச மனைப் பட்டா வாங்கி தருவதாக உத்தரவாதம் தந்துள்ளதையடுத்து, இந்திராணியை அந்த இடத்தை காலி செய்து தரக் கூறி தொடர்ந்து தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.
இன்று இந்திராணியின் வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் இடத்தை காலி செய்து தரக் கோரி மிரட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் இந்திராணியை தகாத வார்த்தையால் திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதில் மயக்கம் அடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து, அவரது மகன் விரைந்து வந்து கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி பெண்ணை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.