தூத்துக்குடியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலணியை சேர்ந்தவர் மகாராஜன் (37). கொல்லுபட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்பு (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதனால் மன வருத்தம் அடைந்த அன்பு ஒரு வருடத்திற்கு முன்பு தாளமுத்து நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மகாராஜன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகாராஜன் மற்றும் அவரது அப்பா சுடலைமுத்து (65) இருவரும் அன்பு வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அன்புவை அரிவாளால் இருவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை கை கால் உட்பட பல இடங்களில் வெட்டு காயம் பட்ட அன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து மகாராஜன் மற்றும் சுடலைமுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.