தமிழகம்

மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட முயன்றவர்கள் கைது.. திருமண மண்டபத்தில் ஒரு புடி புடித்த பெரியார் அமைப்பு!!

கரூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் தொடங்கிய இப்பேரணி பழைய பை பாஸ் சாலை வழியாக லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பெரியார் சிலையில் முடிவடைந்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை கழகம், சாமானிய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், முகிலன் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் சிலை அருகில் சுமார் 200 பேர் மாட்டுக்கறி பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க கூடாது என கரூர் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

மேலும் படிக்க: குவாட்டர் வாங்கினால் சைட் டிஷ் இலவசம்.. கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை படுஜோர்!

இதனையடுத்து அங்கு அதிகளவிலான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் கொண்டு வந்த மாட்டுக்கறி பிரியாணி குண்டாவை பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் உணர்வாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அங்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.