புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்தி கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாலை நேரங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இரவு நேரங்களில் ஒருசிலர் மது அருந்திவிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து இன்று இரவு காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில், ஒதியன்சாலை மற்றும் உருளையன்பேட்டை காவல்நிலைய போலீசார் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்ற மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பொது இடங்களில் மது அருந்துவோர் யாராக இருப்பினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.