புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்தி கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாலை நேரங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இரவு நேரங்களில் ஒருசிலர் மது அருந்திவிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து இன்று இரவு காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில், ஒதியன்சாலை மற்றும் உருளையன்பேட்டை காவல்நிலைய போலீசார் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்ற மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பொது இடங்களில் மது அருந்துவோர் யாராக இருப்பினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
This website uses cookies.