ஒரு நாள் மழையால் 2 அடி பள்ளமான போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள குழியால் விபத்துக்கள் நிகழ்வதால் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 31 வார்டு ஒம் சக்தி கோயில் வீதியில் கடந்த சில மாதங்கள் முன்பு புதிய தார் சாலை அமைத்தனர். தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டில் இருந்த சாலை கடந்த இரண்டு நாட்கள் முன்பு திருப்பூர் மாவட்டத்தில் 17 செ.மீ மழை பெய்தது. அதுவும் தமிழகத்தில் அன்று திருப்பூரில் தான் அதிக மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையில் கொங்கு மெயின் ரோடு, எஸ்.வி.காலனி, எம்.எஸ் நகர், திருநீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொழிந்த மழை நீர் அனைத்தும் இந்த சாலை வழியாக சென்று யூனியன் மில் சாலை அருகில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. அதிக நீர் வந்ததால் சில மாதங்கள் முன்பு போடப்பட்ட தார் சாலை சுமார் 300 அடி தூரம் பெயர்ந்துள்ளது. சில இடங்களில் சுமார் 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுவதாகவும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலையை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும், சாலையை உடனடியாக தரமாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.