திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டமானது தலைவர் சாந்தாமணி தலைமையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பெண்கள், தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்ட தொகையான ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஊராட்சி நிர்வாகம் அதற்கு சரியான நடவடிக்கை இல்லை என கூறி ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நடைமுறை சிக்கலினால் தாமதமாகி வருவதாகவும், கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.