திருவள்ளூர் : ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (30). காய்கறி வியாபாரம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலதி (26). இன்று காலை கணவர் உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்றுள்ளார். மாலதி வீட்டில் தனியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த முகமூடி அணிந்த மர்ம நபர் மாடியின் வழியாக வீட்டின் உள்ளே நுழைந்துள்ளார். தனியாக இருந்த மாலதி அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால், மர்ம நபர் இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் கை, கால்களில் வெட்டியுள்ளார். அவரிடம் தாலிசங்கிலி கம்மல் ஆகியவற்றை பறித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட இளம் பெண் காப்பாற்றுங்கள் என அலறியபடியே வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனிடையே, மர்ம நபர் பீரோவை திறந்து, அதிலிருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
மாலதியின் அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மாலதியை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தமாக, 17 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு முகமூடி அணிந்த நபர் தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
மாலதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் அவர் மற்றும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, மர்ம நபர் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், அவரை வெட்டி விட்டு பணம் மற்றும் நகையை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.