சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணூர் உப்பங் கழி கடற்கரை பக்கிம்கம் கால்வாய் பகுதிகளில் கலந்த தொழிற்சாலை கழிவுகள் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அது மெல்ல பரவி பழவேற்காடு கோரை குப்பம் முதல் வைரவன் குப்பம் வரை கடற்கரை ஓரங்களில் பரவி உள்ளது.
இதனால் மீன்பிடி படகுகள் வலைகள் சேதம் அடையும் நிலை உள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் சில மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கிறது.
புயல் கனமழை காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் படலம் பரவி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்ததார்.
அவரிடம் எண்ணெய் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.