Categories: தமிழகம்

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (30). இவர் தனியார் ஏர்டெல் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார். இவருக்கும் பாபநாசம் அருகே உள்ள கோவிந்த குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (26) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இருவீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்சமயம் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில், கேசவமூர்த்தி தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கேசவமூர்த்தி, மனைவியிடம் வழக்கம்போல் சண்டையிட்டார். இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி  கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கியவுடன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சென்ற திருவாரூர் நகர காவல்நிலைய போலீசார் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.இதுகுறித்து உயிரிழந்த பிரியதர்ஷினியின் சித்தி கவிதா கூறுகையில்.. தொடர்ந்து எங்கள் வீட்டுப் பெண்ணை கேசவமூர்த்தி குடித்துவிட்டு மது போதையில் தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தூக்கு மாட்டி கொண்டது குறித்து கூட எங்களுக்கு சொல்லவில்லை. அந்த ஊர் மக்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிந்தது நாங்கள் நேரடியாக சென்று மருத்துவமனையில் பார்த்த பொழுது அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பிரியதர்ஷினி உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ளதால் திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் பாலச்சந்திரன் இன்று விசாரணை நடத்தினார்.

இதனிடையே பிரியதர்ஷினியின்  அண்ணன் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவாரூர் நகர காவல்துறையினர் முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KavinKumar

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.