தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கட்-ஆஃப் குறைய வாய்ப்பு?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 2,206 பணியிடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் திட்டமும் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி திட்ட அறிவிப்பில், 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜூன் 9ஆம் தேதி 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் சுமார் 15.8 லட்சம் பேர் தேர்வெழுதினர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வினை எழுதினர். இதனிடையே, கடந்த செப்டம்பரில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது.

இதையும் படிங்க: சங்கிகளை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. உதயநிதி போட்டோவை காலால் மிதித்த வீடியோ.. அவரே கொடுத்த பதிலடி!

இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (அக்.9) வெளியான அறிவிப்பில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது.

இதன் காரணமாக, கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளதாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதேநேரம், இந்த முறை வனம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் கீழான பணியிடங்களும் இந்த குரூப் 4 மூலம் நிரப்பப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

14 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

15 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

16 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

16 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

17 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

17 hours ago

This website uses cookies.