டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 2,206 பணியிடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் திட்டமும் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி திட்ட அறிவிப்பில், 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூன் 9ஆம் தேதி 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் சுமார் 15.8 லட்சம் பேர் தேர்வெழுதினர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வினை எழுதினர். இதனிடையே, கடந்த செப்டம்பரில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: சங்கிகளை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. உதயநிதி போட்டோவை காலால் மிதித்த வீடியோ.. அவரே கொடுத்த பதிலடி!
இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (அக்.9) வெளியான அறிவிப்பில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது.
இதன் காரணமாக, கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளதாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதேநேரம், இந்த முறை வனம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் கீழான பணியிடங்களும் இந்த குரூப் 4 மூலம் நிரப்பப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.